Breaking News

தை பிறந்ததையொட்டி பட்டுசேலைகளை வாங்கிட அதிகளவிலானோர் காஞ்சிபுரம் நோக்கி படையெடுப்பு... கடும் போக்குவரத்து நெரிசல்

     



  • தை பிறந்ததையொட்டி பட்டுசேலைகளை வாங்கிட அதிகளவிலானோர் காஞ்சிபுரம் நோக்கி படையெடுப்பு
  • பட்டு ஜவுளி கடைகள் மிகுந்த காஞ்சிபுரம் காந்திசாலையில் மணமக்கள் வீட்டார்,சுற்றுலா பயணிகள் என ஏராளமானோர் பட்டுபடுவை எடுத்திட குவியும் பொதுமக்கள்
  • போலீசார் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டும் சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களால் போலீசார் திணறல்
  • போக்குவரத்து நெரிசலில் சிக்கி முக்கிய சாலைகளில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்

பட்டு நகரம் என்று அழைக்கப்படும் காஞ்சிபுரத்தில் பட்டுப்புடவைகளை வாங்கிட வெளிமாநில,மாவட்டங்களை சேர்ந்த மக்கள் அதிகளவிலானோர் வருகைதந்து பட்டு ஜவுளி புடவைகளை வாங்கி செல்வர்.



இந்த நிலையில் கடந்த மாதம் மார்கழியில் சுபமுகூர்த்தங்கள் இல்லாததன் காரணமாக சற்று வெறிசோடி காணப்பட்டது.இந்தநிலையில் சுபமுகூர்த்த மாதம் என்று அழைக்கப்படகூடிய தை மாதமானது கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு பிறந்தது.இந்த மாதத்தில் சுபமுகூர்த்த நாட்கள் அதிகம் வரக்கூடிய நிலையில் மணமக்கள் வீட்டார்கள் பட்டு புடவைகளை வாங்கிட அதிகளவிலானோர் காஞ்சிபுரத்தில் படையொடுத்துள்ளனர்.

இந்த வகையிலே பட்டு ஜவுளி கடைகள் மிகுந்த காஞ்சிபுரம் காந்தி சாலை பகுதியில் காலை முதலே அதிகளவிலானோர் வருகைதந்து பட்டு ஜவுளி புடவைகளை வாங்கிட அதிகளவில் வருகைதந்து தங்களுக்கு தேவையான பட்டுப்புடவைகளை வாங்கி சென்று வருகின்றனர்.

முதல்வர் ஸ்டாலின் மீது லஞ்ச ஒழிப்பில் புகார் கொடுத்த சவுக்கு சங்கர்

இவர்கள் வரக்கூடிய வாகனங்கள் அனைத்துமே பார்க்கிங் என்று சொல்லப்படகூடிய வாகன நிறுத்தமிடங்கள் இல்லாததால் சாலையிலேயே வாகனங்களை நிறுத்தவிட்டு சென்று விடுகின்றனர்.

இதன் காரணமாக அச்சாலை முழுவதுமே போக்குவரத்து நெரிசலானது ஏற்பட்டு வாகனங்கள் ஊர்ந்து செல்ல கூடிய நிலையானது ஏற்பட்டுள்ளது.போக்குவரத்து நெரிசலை கட்டுபடுத்தபடுத்த போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில் சாலையில் நிறுத்தப்படும் அந்த வாகனங்களினால் போக்குவரத்து சீர் செய்ய திணறி வருகின்றனர்.

No comments

Thank you for your comments