பெருநகர் அரசு மாதிரி பள்ளியில் 81 கலைதிறன் கொண்ட மாணவ மாணவி மாநில அளவில் தேர்வு
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பெருநகர் கிராமத்தில் அரசு மாதிரி பள்ளி இயங்கி வருகிறது இப்பள்ளியில் கலைத் திருவிழா என 120 பள்ளிகளை சேர்ந்த பல்வேறு போட்டிகளில் உள்ள 777 பேர் கலைதிறன் கொண்ட மாணவ மாணவியர்கள் போட்டியில் கலந்து கொண்டனர்.
பெருநகர் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் 232 மாணவர்கள் வட்டார அளவில் கலைத் திறனை வெளிப்படுத்திஇதில் 141 பேர் வட்டார அளவில் வெற்றி பெற்றனர் மேலும் மாநில அளவில் மணல் சிற்பம் இசைக்கலைகள் என பல்வேறு கலைத் திறன் கொண்ட பல்வேறு மாணவ மாணவியர் 81 பேர் தேர்வாகியுள்ளனர்பெருநகர் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் உள்ள மாணவ மாணவிகள் 385 பேர் வெற்றி பெற்று மாநில அளவில் 81பேர் தேர்வாகி உள்ளது என்பதை இப்பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர் கடுமையான உழைப்பிற்கு கிடைத்த வெற்றியாகவே கருதுகின்றனர்
தலைமை ஆசிரியர் மாலதி கூறுகையில்:-
பெருநகர் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியை பொருத்தவரையில் படிப்பிலும் விளையாட்டிலும் சிறந்த முறையில் பயிற்சிகளும் கற்பித்தலும் வழங்கி வருகிறோம் மேலும் எங்களுடைய மாணவர்கள் 81 பேர் மாநில அளவில் கலை திறன் கொண்ட போட்டிக்கு தேர்வாகியுள்ளது என்பது ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு கிடைத்த பெருமையாகவே நாங்கள் கருதுகின்றோம் என கூறினார்


No comments
Thank you for your comments