அதிமுக பொன்விழா முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கல்
கழக பொன்விழா ஆண்டு மற்றும் 51 ஆம் ஆண்டு துவக்க விழா முன்னிட்டு காஞ்சிபுரம் நாராயணன் பாளையம் தெரு பகுதியில் பகுதி கழக செயலாளர் கோல்டு ரவி ஏற்பாட்டில் மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் புரட்சி தலைவர் எம்ஜிஆர், புரட்சி தலைவி அம்மா திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
உடன் கழக அமைப்புச் செயலாளர்கள் வாலாஜாபாத் பா. கணேசன் , மைதிலி திருநாவுக்கரசு, மாவட்ட அவைத்தலைவர் குண்ணவாக்கம் கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய செயலாளர் தும்பவனம் ஜீவானந்தம், களக்காட்டூர் ராஜி, அத்திவாக்கம் ரமேஷ், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே.யு.எஸ்.சோமசுந்தரம், மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் ஆர். டி. சேகர், மாவட்ட பாசறை செயலாளர் வி ஆர் மணிவண்ணன், மாவட்ட மாணவரணி செயலாளர் திலக் குமார், மாவட்ட கைத்தறி பிரிவு செயலாளர் வில்வபதி, மாவட்ட இளைஞரணி இணை செயலாளர் படுநெல்லி தயாளன், மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் விஸ்வநாதன், பகுதி கழக செயலாளர்கள் ,என்.பி.ஸ்டாலின், பாலாஜி, மாமன்ற உறுப்பினர்கள் சண்முகானந்தம், சிந்தன், வட்ட செயலாளர் சம்பத் தனபால், முன்னாள் கவுன்சிலர் விநாயகம் உள்ளிட்டோர் உள்ளனர்.




No comments
Thank you for your comments