2022 -ஆம் ஆண்டிற்கான டாக்டர் அம்பேத்கர் தமிழ்நாடு அரசு விருது பெற விண்ணப்பிக்கலாம்..
டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பெயரில் ஆதிதிராவிடர் மக்களின் முன்னேற்றத்திற்கு அரிய தொண்டு செய்பவருக்கு 2022 ஆம் ஆண்டின் திருவள்ளுவர் திருநாளன்று தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் டாக்டர் அம்பேத்கர் தமிழ்நாடு அரசு விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன.
விண்ணப்பிக்க தகுதிகள் :
1. பட்டியல் இன சமுதாயத்தைச் சேர்ந்த மக்களின் சமூக பொருளாதாரம் மற்றும் கல்வி நிலையை உயர்த்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள்.
2. பட்டியல் இன சமுதாயத்தைச் சேர்ந்த மக்களின் வாழ்க்கைத் தரம் உயர மேற்கொள்ளப்பட்ட பணிகள்.
3. கடந்த பத்து ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட பணிகள், சாதனைகள். இதற்கான விண்ணப்பங்கள் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் பெற்று விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.
No comments
Thank you for your comments