Breaking News

ஏனாத்தூர் ஊராட்சியில் கட்டடம் சேதமடைந்து புதர்மண்டி கிடக்கும் சுகாதார நிலையம்... வேதனையில் பொதுமக்கள்

வாலாஜாபாத் ஒன்றியம் ஏனாத்தூர் ஊராட்சியில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் செயல்பட்டு வரும் துணை சுகாதார நிலைய கட்டடம் மிகுந்த சேதம் அடைந்து காணப்படுகிறது. 


மேலும் மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கி நீந்தி செல்லும் அவல நிலை உள்ளது. துணை சுகாதார நிலையத்தை சுற்றிலும் அடர்ந்த முட்புதர்களாக காட்சி அளிக்கிறது. இதனால் துணை சுகாதார நிலையத்துக்கு வர பொதுமக்கள் அச்சப்படுவதாக கூறப்படுகிறது. 



இதன்காரணமாக ஏனாத்தூர் பகுதியில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அரசு தலைமை மருத்துவமனைக்கு கர்ப்பிணி பெண்கள் செல்லுகின்ற நிலை உள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர். 



கடந்த தேர்தலின் போது இந்த துணை சுகாதார நிலையத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்டித் தருவதாக திமுகவினர் வாக்குறுதி அளித்த நிலையில் பல மாதங்கள் கடந்தும் துணை சுகாதார நிலையத்தை சீரமைக்க மாவட்ட நிர்வாகமோ அல்லது மாவட்ட சுகாதாரத்துறையே எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை ஏன்? என்று அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.



No comments

Thank you for your comments