Breaking News

மனுநீதி நாள் முகாமில் 244 பயனாளிகளுக்கு ரூ.1,98,04,995/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் வட்டம், திருவானைக்கோயில் ஊராட்சி, விச்சூர் கிராமத்தில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் 244 பயனாளிகளுக்கு  ரூ.1,98,04,995/- (ரூபாய். ஒரு கோடியே தொண்ணூற்று எட்டு லட்சத்து நான்காயிரத்து  தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஐந்து மட்டும்)  மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.


காஞ்சிபுரம் மாவட்டம்,உத்திரமேரூர் வட்டம், திருவானைக்கோயில் ஊராட்சி, விச்சூர் கிராமத்தில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் 244 பயனாளிகளுக்கு  ரூ.1,98,04,995/- (ரூபாய். ஒரு கோடியே தொண்ணூற்று எட்டு லட்சத்து நான்காயிரத்து  தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஐந்து மட்டும்)  மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் வழங்கி பொது மக்களிடம் பேசியதாவது:

நமது மாவட்டத்தில் இயங்கி வரும் வருவாய் துறை, ஊரக வளர்ச்சித்துறை,  மாற்றுத்திறனாளி நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, தொழில் துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத் துறை, கூட்டுறவுத்துறை,  சமூக நலன் மற்றும் பாதுகாப்புத்துறை உள்ளிட்ட துறைகளின் செயல்படுத்தப்பட்டு வரும்  திட்டங்களின் விவரங்கள் குறித்து துறை சார்ந்த  உயர் அலுவலர்கள் பொது மக்களிடம் எடுத்துரைத்தனர்.

இத்திட்டங்கள் குறித்த விவரங்கள் அனைத்தும் இங்கு அமைக்கப்பட்டு உள்ள  துறை சார்ந்த அரங்குகளில் பொது மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் வைக்கப்பட்டுள்ளது.  மேலும் திட்டங்களின் விவரங்கள் பற்றிய சந்தேகம் ஏதேனும் இருப்பின் துறை சார்ந்த அலுவலர்களிடம் கேட்டறிந்து  தங்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தி கொள்ளலாம். 

இன்று மனுநீதி நாள் முகாம் நடைபெறுவதை முன்னிட்டு,  23.09.2022 முதல் 07.10.2022 வரை வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் முகாமிட்டு பொது மக்களிடம் மனுக்கள் பெறப்பட்டது. அதனை முறையாக பரிசீலித்து, பெறப்பட்ட மனுக்களில் மாற்றுதிறனாளி நலத்துறை மூலம் காதுக்குப்பின் அணியும் காதொலிக் கருவி 1 நபருக்கும், தனித்துவம் வாயந்த தேசிய அடையாள அட்டை 5 நபர்களுக்கும், வருவாய்துறை மூலம் அடிப்படை தேவைகளான இலவச வீட்டுமனைப் பட்டா/110  நபர்களுக்கு, முதியோர் உதவிதொகை /26 நபர்களுக்கும், மின்னணு குடும்ப அட்டை /9 நபர்களுக்கும், பழங்குடியினர் இனச்சான்று /6 ஊரக வளர்ச்சித் துறை மூலம் மகளிர் சுய உதவிக்குழு வங்கிக்கடன்/6 நபர்களுக்கும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் சலைவைப்பெட்டி /10 நபர்களுக்கும், ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் தையல் இயந்திரம்/3 நபர்களுக்கும், தொழில்துறை மூலம் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்ட கடன்/5 நபர்களுக்கும், வேளாண்மைத்துறை மூலம் உரம் மற்றும் விதைகள்/12 நபர்களுக்கும், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிக்த்துறை உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களுக்கு மானியத்துடன் கடன் உதவித்தொகை/2 நபர்களுக்கும், தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் /12 நபர்களுக்கும், தோட்ட கலைத்துறை மூலம் நாற்றுகள்/5 நபர்களுக்கும், கூட்டுறவுத்துறை மூலம் மகளிர் சுய உதவிக்குழு கடன்/26 நபர்களுக்கும் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் புல்வெட்டும் கருவி /1 நபர்க்கும், கன்று பராமரிப்பு பெட்டகம் /5 நபர்களுக்கும் வழங்கப்பட்டது.

ஒவ்வொரு வீட்டிலும் "குட்டி காவலர் "

இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.க.செல்வம், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.க.சுந்தர், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.கோ.சிவருத்ரய்யா, உத்திரமேரூர் ஒன்றியக் குழு துணைத் தலைவர் திருமதி. வசந்தி குமார், காஞ்சிபுரம் தனி துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) திருமதி.ரா.சுமதி, மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


No comments

Thank you for your comments