Breaking News

10.09.2022 அன்று பொது விநியோகத்திட்ட குறை தீர் கூட்டம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் எதிர்வரும்  10.09.2022 அன்று காலை 10.00 மணிக்கு, காஞ்சிபுரம் வட்டத்தில் உழக்கோல்பட்டு, உத்திரமேரூர் வட்டத்தில் காரணிமண்டபம், வாலாஜாபாத் வட்டத்தில் கம்பராஜபுரம், திருப்பெரும்புதூர் வட்டத்தில் மேல்மதுரமங்கலம்,  குன்றத்தூர் வட்டத்தில் கெருகம்பாக்கம் ஆகிய கிராமங்களில்  பொது விநியோகத்திட்ட  குறை தீர் கூட்டம்  நடைபெற  உள்ளது.

மேற்கண்ட கிராமங்களில் வசித்துவரும்  பொது மக்கள் தங்கள் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை / நகல் குடும்ப அட்டை, கைப்பேசி பதிவு /மாற்றம் செய்தலுக்கான கோரிக்கை மனுக்களை அளிக்கலாம். மேற்படி மனுக்கள் மீது உடன் தீர்வு காணப்படும். 

மேலும், மூன்றாம் பாலினத்தவர், பழங்குடியினர் மற்றும் நரிக்குறவர்  சமுதாயத்தினை சேர்ந்தவர்கள் ஏதும் விடுபட்டிருப்பின் அவர்களும் புதிய குடும்ப அட்டைகள் பெறுவதற்குரிய மனுக்களை அளிக்கலாம். 

மேற்படி, முகாம் நடைபெறும் இடங்களில், கொரானா முன்னெச்சரிக்கை  நடவடிக்கைகளான முகக்கவசம் அணிதல், சமூக  இடைவெளியை கடைப்பிடிக்கவும் மற்றும் கிருமி நாசினியை  பயன்படுத்திடமாறும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments

Thank you for your comments