வேலூரில் வீடுகளில் மர்ம நபர்கள் திருட்டு
வேலூர், ஆக.22-
வேலூர் மற்றும் சத்துவாச்சாரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் மர்ம நபர்கள் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
கொள்ளையர்களை பிடிக்க போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் கொள்ளையடித்தபோது அந்த கும்பல் பயன்படுத்திய கார் அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. பதிவான கார் நம்பரை வைத்து தனிப்படை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
அதில்கொள்ளை கும்பல் பயன்படுத்திய கார் தர்மபுரி பகுதியில் இருந்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் அங்கு சென்று கார் மற்றும் காரை பயன்படுத்திய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரை பள்ளிகொண்டா போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அவர்களிடம் வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் தொடர்ந்து விசாரணை நடத்தினார்.
விசாரணையின் போது துணைபோலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு தலைமையில் போலீஸ் நிலையத்திற்குள் யாரும் செல்லமுடியாத வகையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments
Thank you for your comments