இன்னும் நிறைய சம்பவங்களை செய்யப் போறோம்... காத்திருங்கள்... அதிரும் சமூக வலைதளம்
சென்னை:
"திராவிட மாடல் ஆட்சிக் காலத்தின் திட்டங்களுக்கு சென்னை ஒரு ரோல் மாடல்" என்று சென்னை தினம் கொண்டாடப்படுவதை ஒட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில்,
"பிரிட்டிஷார் கட்டமைத்த மெட்ராஸை சென்னையாக்கியவர் முத்தமிழறிஞர் கலைஞர். அதற்கு இன்றைக்கு 383-வது பிறந்தநாள். திராவிட மாடல் ஆட்சிக் காலத்தின் திட்டங்களுக்கு சென்னை ஒரு ரோல் மாடல்.
இப்ப நீங்க பார்க்கும் இந்த நவீனச் சென்னையை வடிவமைப்பதில், மேயராக இருந்த என் பங்களிப்பும் இருக்கு என்பதில் பெருமை. நீங்க எதிர்பார்க்கும் இன்னும் நிறைய சம்பவங்களை செய்யப் போறோம். காத்திருங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
#HBDChennai!
— M.K.Stalin (@mkstalin) August 22, 2022
பிரிட்டிஷார் கட்டமைத்த மெட்ராஸை சென்னையாக்கியவர் முத்தமிழறிஞர் கலைஞர்.
அதற்கு இன்னைக்கு 383வது பிறந்தநாள். திராவிட மாடல் ஆட்சிக்காலத்தின் திட்டங்களுக்கு சென்னை ஒரு ரோல் மாடல். (1/2) pic.twitter.com/KUBvODJVve

No comments
Thank you for your comments