Breaking News

கோவையில் கஞ்சா சாக்லேட் கடத்தல் - 15 பேர் மீது வழக்கு பதிவு

கோவை, ஆக.1-

கோவையில் சாக்லேட் வடிவத்தில் கஞ்சா விற்பனை செய்ய வந்த முதியவர் கைது செய்யப்பட்டார். அவருடன் தொடர்புடைய 15 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் மாணவர் மற்றும் புறநகர் பகுதிகளில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை குறிவைத்து பான் மசாலா, போதை மாத்திரை, கஞ்சா விற்பனை ஆகியவை அதிகரித்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக கஞ்சா மிட்டாய்கள் விற்பனை அதிகரித்து இருப்பதாக மாநகர காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

அந்தத் தகவலின் அடிப்படையில் மாநகரப் பகுதியில் காவல் ஆணையாளரின் உத்தரவின் பேரில் போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்தினர். இந்நிலையில் இரத்தினபுரி காவல் ஆய்வாளர் ரமேஷ் கண்ணன் தலைமையில் வாகன தணிக்கையில் போலீசார் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான இருசக்கர வாகனத்தில் வந்த நபரை பிடித்து சோதனை நடத்தினர். அவர் தனது இருசக்கர வாகனத்தில் மறைத்தபடி வைத்திருந்த பையை போலீசார் சோதனை செய்தனர்.

இந்த சோதனையில் புது வடிவ மிட்டாய்கள் இருந்துள்ளது. இதை கண்டு சந்தேகித்த போலீசார் நடத்திய விசாரணையில் கஞ்சா கலந்து போதைக்காக பயன்படுத்தும் மிட்டாய்கள் என்பது தெரிய வந்தது. மேலும் பள்ளி கல்லூரி மாணவர்களை குறி வைத்து இந்த விற்பனை நடத்தி வந்ததும் தெரியவந்தது.



இதைத்தொடர்ந்து கஞ்சா மிட்டாய் விற்பனை செய்ய வந்த கோவை அறிவொளி நகரை சேர்ந்த முதியவர் பாலாஜியை (58) போலீசார் கைது செய்தனர். இதையடுத்து காவல் நிலையத்தில் வைத்து முதியவரிடம் விசாரணை மேற்கொண்டதில் போதை கஞ்சா மிட்டாய்களை கடத்தி விற்கும் கும்பல் குறித்த தகவல் கிடைத்தது.

மேலும் கஞ்சா மிட்டாய் விற்பனை கும்பலின் தலைவனாக டெயில் சுரேஷ் என்பவர் செயல்பட்டு வந்துள்ளதும், அவரைத் தொடர்ந்து கௌதம், நந்தா, மோசஸ், கருப்பு கவுதம், பூபதி, சந்தோஷ், விக்கி வேதா, தீபக் தமிழா ,சிகல் சந்தோஷ், கவாஸ்கான், மாணிக்கம், மதுரை, அம்புரோஸ், கருப்பு பிரவீன் ஆகியோரும் இந்த கடத்தல் கும்பலில் செயல்பட்டு வருவது தெரியவந்துள்ளது. இதையடுத்து போலீசார் இந்த 15 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து வலை வீசி தேடி வருகின்றனர்.


பிரமாண்ட கலை நிகழ்ச்சிகளுடன் கோலகலமாக
 செஸ் ஒலிம்பியாட் போட்டி   துவக்க விழா - முழு தொகுப்பு

No comments

Thank you for your comments