Breaking News

அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் பணி நியமனம்... உடனே விண்ணப்பிக்கலாம்...

பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும், ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / அரசு தொடக்க / நடுநிலை /உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் 2022-23ஆம் கல்வியாண்டில் 01.06.2022 நிலவரப்படி காலியாகவுள்ள இடைநிலை / பட்டதாரி / முதுகலை ஆசிரியர் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர் நியமனம் மேற்கொள்ளப்படவுள்ளது.

தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து மூலமான விண்ணப்பங்களை நேரடியாகவோ அல்லது மின்னஞ்சல் வாயிலாகவோ உரிய கல்வித் தகுதிச் சான்றுகளுடன் தொடர்புடைய மாவட்டக் கல்வி அலுவலரிடம் (District Educational officer) சமர்ப்பிக்க வேண்டும்.


இது சார்பான காலிப்பணியிட விவரங்கள் முதன்மைக் கல்வி / மாவட்டக் கல்வி / வட்டாரக் கல்வி அலுவலகங்ககளின் அறிவிப்புப் பலகையில் 02.07.2022 அன்று வெளியிடப்படும்.


விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் மற்றும் நேரம் 06.07.2022 மாலை 5 மணி ஆகும். குறித்த நேரத்திற்குப் பிறகு அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப் படமாட்டாது.


தகவல் பலகையில் வெளியிடப்படும் காலிப் பணியிட விவரங்கள் மாறுதலுக்குட்பட்டது.

 

விண்ணப்பங்கள் அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி

  1. காஞ்சிபுரம் கல்வி மாவட்டம்_ deokpm@gmail.com

  2. திருபெரும்புதூர் கல்வி மாவட்டம் - deosripdr@gmail.com 

வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments

Thank you for your comments