Breaking News

செஸ் ஒலிம்பியாட் போட்டி : குக்கிராமம் வரை செய்தி சென்றுள்ளது அமைச்சர் மெய்யநாதன் பெருமிதம்

மாமல்லபுரம் 

செஸ் ஒலிம்பியாட் போட்டியையொட்டி மாமல்லபுரத்தில் போட்டி நடைபெறும் அரங்கில் இன்று பிரமாண்ட பயிற்சி ஆட்டம் காலை 10 மணிக்கு தொடங்கியது. இந்தப் போட்டியை அமைச்சர்கள் மெய்யநாதன், தா.மோ.அன்பரசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். 


பின்னர் விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் நிருபர்களிடம் கூறியதாவது, பிரதமர் நரேந்திர மோடியும், முதஹ்மைச்சர் மு.க. ஸ்டாலினும் சென்னையில் தொடங்கி வைக்க இருக்கும் செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா பிரமாண்டமாக இருக்கும். 



இன்று நடைபெறும் பயிற்சி போட்டி நோபல் ரெக்கார்டாக கருதப்படுகிறது. இந்த பயிற்சி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்குகிறார்கள். உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. வருகை தர இருக்கிறார். இந்த பயிற்சி போட்டியில் பங்கேற்க பல்வேறு மாநிலங்களில் இருந்து வீரர், வீராங்கனைகள் வந்து இருக்கிறார்கள். 

இந்த போட்டி இரவு 8 மணி வரை தொடர்ந்து போட்டி நடைபெற இருக்கிறது. இந்த போட்டி மூலம் இந்தியாவின் நீண்ட நாள் கனவு இன்று இந்த மண்ணில் நிறைவேற்றி இருக்கிறது என்று செஸ் நடுவர்கள் தெரிவித்தனர். இதற்காக அவர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தங்களது நன்றியை தெரிவித்தனர். 

செஸ் ஒலிம்பியாட் போட்டி மூலம் தமிழகத்துக்கு மட்டுமல்ல இந்தியாவுக்கு பெருமை சேர்க்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள குக்கிராமம் வரை செஸ் ஒலிம்பியாட் தொடர் பற்றிய செய்தி சென்று சேர்ந்துள்ளது. இந்த சாதனை எல்லாம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை தான் சாரும். 

இதற்காக செஸ் வீரர், வீராங்கனைகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து உள்ளனர். செஸ் ஒலிம்பியாட் சுடர் ஓட்டம் முதல் முறையாக நடைபெறுகிறது. 

தமிழ்நாட்டில் கோவை, மதுரை, கன்னியாகுமரி, தஞ்சை ஆகிய இடங்களில் ஜோதி கொண்டுவரப்பட்டு இறுதியில் போட்டி நடைபெறும் மாமல்லபுரத்திற்கு வந்தடையும். இந்த போட்டியையொட்டி 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார். 

No comments

Thank you for your comments