திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சுதா(எ)சுப்புராயனை அறிமுகப்படுத்தினார் மா.செ., சுந்தர்
காஞ்சிபுரம் மாநகராட்சியில் 36 வது வார்டில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சுதா(எ)சுப்புராயனை மாவட்ட செயலாளர் சுந்தர் அறிமுகப்படுத்தினார்.
கடந்த பிப்ரவரி மாதம் நகர்புற உள்ளாட்சி தேர்தல் காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள 51 வார்டுகளில் 50 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற்று முடிந்தது.
இதில் காஞ்சிபுரம் மாநகராட்சி 36 வது வார்டில் அதிமுக வேட்பாளர் ஜானகிராமன் என்பவர் தற்கொலை செய்து கொண்டார்.இதனால், இந்த வார்டில் தேர்தல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.
மீண்டும் இந்த வார்டில் தேர்தல் நடத்த தேர்தல் அதிகாரிகள் தேதியை அறிவித்ததை தொடர்ந்து 36வது வார்டு திமுக தலைமையிலான மதச்சாற்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளர் சுதா என்கிற சுப்புராயனை திமுகவினரிடமும் தோழமை கட்சியினரிடமும் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர்-உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் அறிமுகப்படுத்தி வைத்தார்.
காலியாக உள்ள இடங்களுக்கு 9 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் எனவும், 12 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.
இந்நிகழ்வில் காஞ்சிபுரம் நாடளுமன்ற உறுப்பினர் செல்வம்,சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன், நகர செயலாளர் சன்பிராண்ட். ஆறுமுகம், மேயர் மகாலட்சுமி யுவராஜ்,தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் செங்குட்டுவன்,சீனிவாசன்,மாநில வர்த்கர் அணி துணை செயலாளர் இராமகிருஷ்ணன்,முருகன் பட்டு கூட்டுறவு சங்க தலைவர் முத்துசெல்வம்,மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
No comments
Thank you for your comments