நாடாளுமன்ற உறுப்பினரின் மேம்பாட்டு நிதியிலிருந்து 10 லட்சம் செலவில் அரசு பள்ளிகளுக்கு மேசை நாற்காலி
காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினரின் மேம்பாட்டு நிதியிலிருந்து 10 லட்சம் செலவில் அரசு பள்ளிகளுக்கு மேசை நாற்காலி வழங்கப்பட்டது.
சின்ன காஞ்சிபுரம் மற்றும் செவிலிமேடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து
10 லட்சம் ரூபாய் மதிப்பில் மாணவர்கள் பயன்பெரும் வகையில் புதிய மேசைகள் மற்றும் நாறிகாலிகளை காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர்-உத்திரமேரூர் எம்எல்ஏ சுந்தர் வழங்கினார்.
இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம்,சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன்,மேயர் மகாலட்சுமி யுவராஜ்,நகர செயலாளர் சன்பிராண்ட் ஆறுமுகம்,மண்டல குழு தலைவர்கள் சந்துரு,செவிலிமேடு மோகன்,வெங்கடேசன்,யுவராஜ் உள்ளிட்ட திமுகவினர் கலந்துகொண்டனர்.
No comments
Thank you for your comments