மாநகராட்சியின் சார்பில் குழந்தைகள் மரம் நடுதல் ஊக்குவிப்பு விழா
காஞ்சிபுரத்தில் கலைஞர்-99 தலைப்பில் குழந்தைகள் மரம் நடுதல் ஊக்குவிப்பு தொடக்க விழா மாநகராட்சியின் சார்பில் நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாநகராட்சியின் சார்பில் கலைஞர்-99 என்ற தலைப்பில் குழந்தைகள் மரம் நடுதல் ஊக்குவிப்பு தொடக்க விழா பிள்ளையார் பாளையம் பகுதியில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா நூற்றாண்டு நினைவு பூங்காவில் நடைபெற்ற நிகழ்வில் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் பங்கேற்று தொடக்கி வைத்தார்.
இந்நிகழ்வில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம்,சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன்,மாநகராட்சி மேயல் மகாலட்சுமி யுவராஜ்,மாநகராட்சி ஆணையர் நாராயணன்,துணை மேயர் குமரகுருநாதன்,முன்னாள் நகர மன்ற தலைவர் சன்பிராண்ட் கே.ஆறுமுகம் ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர்.
மேலும் இந்நிகழ்வில் மண்டல குழு தலைவர்கள் சந்துரு,சசிகலா,சாந்தி சீனிவாசன்,மோகன், நிலைக்குழு தலைவர்கள் சுரேஷ்,சங்கர்,விஸ்வநாதன், இலக்கியா சுகுமார்,பூங்கொடி தசரதன்,சித்ரா இராமசந்திரன், நிர்மலா பிரகாசம் மற்றும் மாநகர உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
No comments
Thank you for your comments