Breaking News

மகாபாரத பெரு விழாவையொட்டி துரியோதனன் படுகள நிகழ்ச்சி

காஞ்சிபுரம் :

காஞ்சிபுரம் அருகே பெருநகர் திரெளபதி அம்மன் திருக்கோவிலில் மஹோத்சவ மகாபாரத பெரு விழாவையொட்டி   வெகு விமரிசையாக நடைபெற்ற துரியோதனன் படுகள நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துக்கொண்டு தங்களின் வேண்டுதல் காணிக்கையை செலுத்தி சாமி தரிசனம் செய்தனர்.


காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் அருகே பெருநகரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் உடனுறை ஶ்ரீ தர்மராஜன் திருக்கோவிலில் ஆண்டுதோறும் மஹோத்சவ மகாபாரத பெருவிழா நடைபெறுவது வழக்கம். 



அதனை தொடர்ந்து இந்த ஆண்டு மஹோத்சவ மகாபாரத பெருவிழா கடந்த மாதம் 27 ஆம் தேதி அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.பெருவிழாவின் 

முக்கிய நிகழ்வான துரியோதனன் படுகள நிகழ்ச்சி இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. அதையொட்டி உற்சவத்திற்காக பிரம்மாண்டமாக   துரியோதனன்  சிலை வடிவமைக்கப்படடு  கட்டைக்கூத்து கலைஞர்களால் பீமன் - துரியோதனன் போரிடும் போர்க்களக் காட்சி தத்ரூபமாக நடத்தப்பட்டது.



இதில் பீமன் வேடமணிந்த ஒருவர் துரியோதனன் சிலையின் தொடைப்பகுதியில் கதாயுதத்தால் ஓங்கி அடித்ததில் அந்த இடத்தில் இருந்து சிவப்பு நிற திரவம் வடிந்ததையடுத்து அதை திரௌபதி வேடமணிந்தவர் கூந்தலில் பூசியப்பின் துரியோதனன் சிலையை மூன்று முறை வலம் வந்த சபதம் முடிந்ததையடுத்து அம்மனுக்கு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. 


பீமன் - துரியோதனன் படுகள காட்சியை தீமிதி விழாவிற்காக காப்பு கட்டிக்கொண்டு விரதம் இருக்கும் பக்தர்களும், பெருநகர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பொதுமக்களும் கலந்துக்கொண்டு தங்களின் வேண்டுதல் காணிக்கையை செலுத்தி தரிசனம் செய்து, திரெளபதி அம்மனை வழிபட்டுச் சென்றனர்.

மேலும் இன்று மாலை தீமிதி திருவிழாவும் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


No comments

Thank you for your comments