காலஞ்சென்ற அரசு ஊழியர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை வழங்கல்
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலகில் பணிபுரிந்து பணியிடையே காலஞ்சென்ற அரசு ஊழியர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்கள் .
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலகில், கிராம உதவியாளர்/ அலுவலக உதவியாளர்/ இளநிலை வருவாய் ஆய்வாளர் பணியிடங்களில் பணிபுரிந்து பணியிடையே காலஞ்சென்ற அரசு ஊழியர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் 23.05.2022 அன்று வழங்கினார்.
இதில் ஆரிய பெரும்பாக்கம் கிராம உதவியாளராக பணியாற்றிய திரு.சின்ன பையன் என்பவரின் மகன் திரு.சி.பிரகாஷ் என்பவருக்கு இளநிலை வருவாய் ஆய்வாளர் பணியிடம், தாமல் கிராமத்தில் கிராம உதவியாளராக பணியாற்றிய திரு.பட்டாபி என்பவரின் மகன் திரு.ப.கவியரசன் என்பவருக்கு இளநிலை வருவாய் ஆய்வாளர் பணியிடம், கீழ்புத்தூர் கிராமத்தில் கிராம உதவியாளராக பணியாற்றிய திரு.சந்திரன் என்பவரின் மகன் திரு.அரி என்பவருக்கு கிராம நிர்வாக அலுவலர் பணியிடம், உத்திரமேரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளராக பணியாற்றிய திரு.நரசிம்மன் என்பவரின் மனைவி திருமதி.தேன்மொழி என்பவருக்கு அலுவலக உதவியாளர் பணியிடம், காஞ்சிபுரம் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக பணியாற்றிய திரு.சரவணன் என்பவரின் மனைவி திருமதி.எஸ்.சுஜாதா என்பவருக்கு அலுவலக உதவியாளர் பணியிடம் என மொத்தம் 5 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.கோ.சிவ ருத்ரய்யா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் திரு.ரவிச்சந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், காஞ்சிபுரம் மாவட்டம்.
No comments
Thank you for your comments