நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தனியார் அரவை ஆலைகள் இணையலாம்... விண்ணப்பிக்க அழைப்பு
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் சேகரிப்பது முதல் கழக கிடங்குகளில் கண்டுமுதல் அரிசியினை ஒப்படைப்பது வரையிலான விநியோக சங்கிலி மேலாண்மை திட்டத்தில் கழக அரவை முகவர்களை ( முழு நேர / பகுதி நேரம் ) மற்றும் கழகத்தில் இணையாத தனியார் அரவை ஆலைகளை ஈடுபடுத்த தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் முடிவு செய்துள்ளது.
எனவே இந்நிகழ்வில் ஆர்வமுடைய தனியார் அரவை ஆலைகள் தங்களது விருப்ப கடிதத்தினை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல அலுவலகங்களில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
கூடுதல் விவரங்களுக்கு - தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மண்டல மேலாளர் அவர்களை நேரடியாகவோ அல்லது 044-2723 7650 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.
வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், காஞ்சிபுரம் மாவட்டம்.
No comments
Thank you for your comments