Breaking News

படப்பை ஆ.மனோகரன் தலைமையில் ஊராட்சி குழு கூட்டம்...

காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழு கூட்டம்  மாவட்ட ஊராட்சி குழு தலைவர் படப்பை ஆ.மனோகரன் தலைமையிலும் துணை தலைவர் நித்யா சுகுமார் முன்னிலையிலும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகத்திலுள்ள மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் எந்தெந்த பிரச்சனைகள் உள்ளது என்று அந்தந்த மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்களிடம் கேட்டறிந்து அந்தந்த துறை அரசு அதிகாரிகளுடன் அதனை பற்றி கோரிக்கை வைத்து சரிசெய்து தரும்படி மாவட்ட ஊராட்சி குழு தலைவர் படப்பை ஆ.மனோகரன் மற்றும் துணை தலைவர் நித்யா சுகுமார் கேட்டுக்கொண்டனர்.

இதில் மாவட்ட ஊராட்சி குழு பொறுப்பு செயலாளர் மல்லிகா, மாவட்ட கவுன்சிலர்கள் பத்மா பாபு, சிவராமன்,  ஹரி,  பொற்கொடி செல்வராஜ், சிவசங்கர், அமுதா செல்வம், ராமூர்த்தி, பாலா, வனிதா மகேந்திரன், ராஜலட்சுமி மற்றும் அனைத்து துறையை சார்ந்த அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.





No comments

Thank you for your comments