பல்லவர்மேட்டில் புறக்காவல் நிலையம் திறப்பு மற்றும் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ..
காஞ்சிபுரம் பல்லவர்மேட்டில் புறக்காவல் நிலையம் திறப்பு மற்றும் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் (CCTVs) துவக்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளிகளைக் கண்காணிக்கும் பொருட்டும், குற்றச்சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டும், காவலர்களின் பணி நேரம் மற்றும் பணிச்சுமையைக் குறைக்கும்பொருட்டும்
வடக்கு மண்டல காவல்துறை தலைவர் திரு.பிரேம் ஆனந்த் சின்உறா, இ.கா.ப., மற்றும் காஞ்சிபுரம் சரக காவல் துணைத் தலைவர் திருமதி. M.சத்திய பிரியா, இ.கா.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி கடந்த 10 மாதத்தில் முக்கிய இடங்களில் பொருத்தப்பட்ட அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய 1383 கண்காணிப்பு கேமராக்கள் உட்பட மொத்தம் 4584 (CCTV Cameras) பொருத்தியும், புறக்காவல் நிலையங்களை திறந்தும் மாவட்ட காவல்துறையினர் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர்.
அதன் ஒருபகுதியாக, சிவகாஞ்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பல்லவர்மேடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குற்றச்சம்பவங்களை தடுக்கும்பொருட்டும், அப்பகுதியில் உள்ள சரித்திர பதிவேடு குற்றவாளிகளை கண்காணிக்கவும், அங்கு 24 மணிநேரமும் காவலர்கள் உள்ளவாறு புறக்காவல் நிலையம் திறந்திட காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர் அவர்களின் உத்தரவின்பேரில் காஞ்சிபுரம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.பூ.பொ.ஜீலியஸ் சீசர் அவர்களின் மேற்பார்வையில் சிவகாஞ்சி காவல்நிலைய காவல் ஆய்வாளர் திரு.ஜெ.விநாயகம் அவர்கள் மூலம் புறக்காவல் நிலையம் பல்லவர்மேட்டில் அமைக்கப்பட்டு, அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
51 அவைகள் காஞ்சிபுரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையிலும் மற்றும் காவல் நிலையத்திலும் கண்காணிக்கும் வசதியுடன் கூடியது. இதனை இன்று(21.05.2022) வடக்கு மண்டல காவல் துறைத் தலைவர் திரு.பிரேம் ஆனந்த் சின்உறா, இ.கா.ப., அவர்களும், காஞ்சிபுரம் சரக காவல் துணைத் தலைவர் திருமதி.M.சத்திய பிரியா, இ.கா.ப., அவர்களும் துவக்கிவைத்தனர்..
இந்த கண்காணிப்பு கேமராக்கள் IP தொழிற்நுட்பத்துடன் கூடிய டிஜிட்டல் கேமராக்கள் ஆகும். இந்த கேமராக்களின் இயக்கத்தினை காவல்துறை அதிகாரிகள் எந்த இடத்தில் இருந்தும் தங்களின் கைப்பேசியின் வாயிலாகவும் கண்காணிக்க இயலும். இதனால் அப்பகுதிகளில் குற்றம் நிகழும்பட்சத்தில் குற்றவாளிகளை உடனுக்குடன் பிடிக்கவும் ஏதுவாக இருக்கும் என்பது குறிப்படத்தக்கது.
மேற்படி நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் சரக காவல்துறை துணைத்தலைவர் திருமதி.M.சத்திய பிரியா, இ.கா.ப., மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர், பொதுமக்கள், சமூகஆர்வலர்கள், காவல்துறை அலுவலர்கள் மற்றும் ஆளிநர்கள் கலந்துகொண்டனர்.
No comments
Thank you for your comments