Breaking News

காஞ்சியில் கருட சேவை உற்சவம்

அருள்மிகு வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி மாசம் பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான இன்று கருட சேவை  உற்சவத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.


வழியெங்கும் ஆயிரம் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


உலக பிரசித்தி பெற்ற அருள்மிகு வரதராஜ பெருமாள் கோவில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் அத்திவரதர் வைபவம் நடைபெற்ற திருக்கோவிலில் நேற்று முன்தினம் அதிகாலை கொடியேற்றத்துடன் வைகாசி மாத பிரம்ம உற்சவம் கோலாகலமாக தொடங்கியது.


மூன்றாம் நாளான இன்று வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள வாகன அலங்கார மண்டபத்தில் மல்லி, ரோஜா உள்ளிட்ட பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு நீளம், ரோஸ் வண்ண வெண்பட்டு உடுத்தி வரதராஜ பெருமாள் கருடன் சுமந்தவாரு வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

கோவிலில் இருந்து புறப்பட்ட வரதராஜா பெருமாள் ரங்கசாமி குளம், கீரை மண்டபம், மூங்கில் மண்டபம், பேருந்து நிலையம் மற்றும் நான்கு ராஜ வீதி வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.  

வழியெங்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீபாரதனை செய்தும் கோவிந்தா கோவிந்தா என பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர். சாமி செல்லும் பகுதியின் பல்வேறு இடங்களில் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

கருட சேவை உற்சவத்தின் போது காஞ்சிபுரம் செங்கல்பட்டு திருவள்ளூர் மூன்று மாவட்டத்தைச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா நோய் தொற்று காரணமாக பிரம்மோற்சவம் ரத்து செய்யப்பட்ட நிலையில் இரண்டு ஆண்டுகள் கழித்து கோவிலை கருட சேவை நடைபெறுவதாலும் இன்று ஞாயிற்று கிழமை விடுமுறை என்பதால் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

காஞ்சிபுரம் வரதராஜ  பெருமாள்‌கோவிலின் வைகாசி பிரம்மோற்ச்சவம் 3ம் நாள் தங்க கருட வாகனத்தில்  பெருமாள்  வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் யுவராஜ், கிரிதரன் ஆகியோர் கலந்து கொண்டனர் ஆதிபராசக்தி சித்தர் மன்றம் சார்பாக பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது

No comments

Thank you for your comments