மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்... 286 மனுக்களை மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவு

காஞ்சிபுரம் மாவட்டம், மக்கள் நல்லுறவு மையத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவு மையத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (30.05.2022) மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மையத்தில் பிரதி திங்கட்கிழமை தோறும் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அம்மனுக்கள் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கி தீர்வு காணப்பட்டு வருகிறது.


இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து 286 மனுக்களை பெற்று அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அரசு துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்கள்.

மேலும் காஞ்சிபுரம் மாவட்டம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கிகள் மூலமாக 14 பயனாளிகளுக்கு ரூ.6.85 இலட்சம் மதிப்பிலான கடனுதவிகள் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி இ.ஆ.ப., அவர்களால் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.கோ.சிவ ருத்ரய்யா,  மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் திரு.ரவிச்சந்திரன், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் திருமதி.லட்சுமி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், காஞ்சிபுரம் மாவட்டம்.


No comments

Thank you for your comments