Breaking News

திராவிடர் கழகம் சார்பில் நீட் தேர்வை எதிர்த்து ரப்புரைப் பயண பொதுக்கூட்டம்

காஞ்சிபுரத்தில் திராவிடர் கழக தலைவர் வீரமணி நீட் தேர்வை எதிர்த்து பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்றினார்.


காஞ்சிபுரம் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற நீட் தேர்வு எதிர்ப்பு-தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பு-மாநில உரிமை மீட்பு பரப்புரைப் பயண பொதுக்கூட்டம் மாவட்ட தலைவர் டி.ஏ.ஜி.அசோகன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் பேராசிரியர் டாக்டர் கி.வீரமணி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்வில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் MLA, காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன்,மதிமுக துணை பொது செயலாளர் மல்லை சத்யா,திக மாநில பொது செயலாளர் துரை.சந்திரசேகர்,காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழு துணை பெருந்தலைவர் நித்யா சுகுமார் காஞ்சிபுரம் மாநகர மேயர் மகாலட்சுமி யுவராஜ் ஆகியோர் கலந்துகொண்ட கூட்டத்தில் துணை மேயர் . குமரகுருநாதன், விசிக மாவட்ட தலைவர் பாசறை செல்வராஜ், திமுக ஒன்றிய செயலாளர்கள் பி.எம்.குமார், குமணன், மதிமுக மாவட்ட செயலாளர் வளையாபதி,மக்கள் மன்றத்தை சேர்ந்த மகேஷ்வரி, திராவிடர் கழகத்தை சேர்ந்த கதிரவன்,தமிழ்மணி, முகிலன், இளையவேல்,வேலாயுதம், சுந்தரபிராபகரன், ரவிந்திரன், நடராஜ், உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள், திமுகவினர் உட்பட தோழமை கட்சியினர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.



No comments

Thank you for your comments