அகத்தியா மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியின் 29வது ஆண்டு விழா
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஆலைத் தெருவில் செயல்படும் அகத்தியா மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியின் 29வது ஆண்டு விழாவை முன்னிட்டு 1.சுற்றுச்சூழல் நுண்ணறிவு- Environmental Insight, 2. இயற்கை விழா-Nature festivity , 3) பட்டமளிப்பு மகிமை- Graduation glory என முப்பெரும் விழா நடைபெற்றது.
![]() |
படவிளக்கம் : இடமிருந்து வலம் வாலாஜாபாத் ஒன்றியக் குழு துணைப் பெருந்தலைவர் பி சேகர், பேராசிரியர் Dr ஆறுமுகம், அஜய் குமார், வாலாஜாபாத் பேரூராட்சி மன்றத் தலைவர் இல்லாமல்லி ஆகியோர் |
1.சுற்றுச்சூழல் நுண்ணறிவு- Environmental Insight என்ற தலைப்பில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவ மாணவியர் ஆடல் பாடல், நாடகம் என பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுரி மருத்துவமனையின் இதயவியல் துறை பேராசிரியர் மருத்துவர் M.A. ஆறுமுகம் அவர்கள் கலந்து கொண்டு சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வையும், சுற்றுச்சூழலில் ஏற்படும் நெருக்கடிகள், சுற்றுச்சூழலை புரிந்து கொள்வதன் மூலம் காற்று மாசு, நீர் மாசு, புவிபரப்பு மாசு, ஒலி மாசு ஆகியவற்றிலிருந்து பாதுகாத்திடவும் வலியுறுத்தி பேசினார்.
சிறப்பு அழைப்பாளராக திரு பி. சேகர் வாலாஜாபாத் ஒன்றிய துணைப் பெருந்தலைவர் அவர்களும் பங்கேற்றனர். வாலாஜாபாத் அரிமா சங்க நிர்வாகி எல். சசிக்குமார் அவர்களும் பங்கேற்றார்.
இயற்கை விழா-Nature festivity என்ற தலைப்பில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவ மாணவியர் ஆடல் பாடல், நாடகம் என பல்வேறு நிகழ்ச்சிகளை நிகழ்த்தினர். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக காஞ்சிபுரம் மெட்ரிக் பள்ளிகளின் உதவி ஆய்வாளர் திரு என். சிவக்குமார் அவர்கள் கலந்து கொண்டார், சிறப்பு அழைப்பாளர்களாக வாலாஜாபாத் பேரூராட்சி தலைவர் திருமதி இல்லாமல்லி மற்றும் துணைத் தலைவர் ஏவிஎஸ். சுரேஷ் ஆகியோர் பங்கேற்றனர்.
பட்டமளிப்பு மகிமை- Graduation glory என்ற தலைப்பில் மழலையர் வகுப்பு மாணவ மாணவியர் அனைவருக்கும் பட்டமளிப்பு நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக முனைவர் வி. கிருபாகரன், பரங்கிமலை மெட்ரிக் பள்ளிகளின் உதவி ஆய்வாளர் அவர்களும், சிறப்பு அழைப்பாளர்களாக அரிமா இரமேஷ், வாலாஜாபாத் பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் …..
இந்நிகழ்ச்சி வரவேற்பு, ஏற்பாடு மற்றும் ஒருங்கிணைப்பில் பள்ளி நிர்வாகி . திருமதி சாந்தி அஜய்குமார் செய்திருந்தார். முதல்வர் தேன்மோழி ஆண்டறிக்கை சமர்ப்பித்தார்.
No comments
Thank you for your comments