நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தருமபுரி மாவட்ட ஆலோசனை கூட்டம்
தருமபுரி, ஏப்.13-
நேஷனல் ஜர்னலிஸ்ட் யூனியன் (ழியிஹி) தருமபுரி மாவட்ட தலைமை அலுவலகத்தில் மாவட்ட தலைவர் மா.சுரேஸ் முன்னிலையில், மாவட்ட செயலாளர் மா.செந்தில் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் பற்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் தருமபுரி மாவட்டத்தில் பொறுப்பாளர்களை அறிவித்தமைக்கு தேசிய தலைவர் டாக்டர்.கா.குமார் மற்றும் பொதுச் செயலாளர் டாக்டர்.தாட்சாயிணி அவர்களுக்கும் நன்றி வாசிக்கப்பட்டது.
தருமபுரி மாவட்ட பேருந்து நிலையத்தில் தண்ணீர் பந்தல் அமைக்க நேஷனல் ஜர்னலிஸ்ட் யூனியன் தேசிய தலைவர் டாக்டர்.கா.குமார் அவர்களின் ஆலோசனையின்படி முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஐம்பெரும் விழா நிகழ்ச்சிகள் குறித்தும், பத்திரிக்கையாளர்களின் விழாவில் சிறந்த செய்தியாளர்களுக்கு விருது வழங்கி கௌவரவிக்கும் விதமாக சிறந்த செய்தியாளர்களை தேர்வு செய்வது தொடர்பாக ஆலோசனை செய்யப்பட்டது.
நலிவடைந்த செய்தியாளர்களை தேர்வு செய்து அவர்களின் குடும்பங்களுக்கு உதவி செய்வது மற்றும் அவர்களின் குழந்தைகளுக்கு கல்வி செலவை வழங்க நமது நேஷனல் ஜர்னலிஸ்ட் யூனியன் சார்பில் தேர்வு செய்ய ஆலோசனை செய்யப்பட்டது.
No comments
Thank you for your comments