அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி மலர் தூவி மரியாதை செலுத்தினார் ஆட்சியர் ஆர்த்தி
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளையொட்டி மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி, டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்களின் திருவுருவப் படத்திற்கு இன்று (14.04.2022) மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
உடன் மாவட்ட வருவாய் அலுவலர் சிவ ருத்ரய்யா, ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் பிரகாஷ், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் ரவிச்சந்திரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ப.கணேசன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments