காவல் நிலையங்களில் வரவேற்பு மேஜை அமல்படுத்த நடவடிக்கை
ஆவடி:
ஆவடி காவல் ஆணையரகத்தின் உள்ளடங்கிய 25 காவல் நிலையங்களில் வரவேற்பு மேஜை அமல்படுத்த நடவடிக்கை..
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி காவல் ஆணையரகத்தின் உள்ளடங்கிய 25 காவல் நிலையங்களில் வரவேற்பு மேஜைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் தெரிவித்ததை தொடர்ந்து ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் அவர்கள் தமிழகத்தில் முதன் முதலாக ஆவடி காவல் நிலையத்தில் திறந்து வைத்தார்.
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் சென்னை கோட்டையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் காவல்துறை ஆணையர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் கூட்டம் மார்ச் 10 முதல் 12 வரை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் உத்தரவின் பெயரில் காவல் நிலையம் வரும் பொதுமக்களிடம் காவல்துறையினர் அன்புடனும் மரியாதையுடனும் நடந்து கொள்ள வேண்டும் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குடிநீர் வசதி மின்விசிறி மற்றும் இருக்கைகள் அவர்களுக்கு வசதி செய்து கொடுக்க வேண்டும்... அவர்கள் கொடுக்கும் புகாரின் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தெரிவித்திருந்தார்.
இதனடிப்படையில், ஆவடி காவல் நிலையத்தில் வரவேற்பு மேஜையை காவல் ஆணையர் சந்தீப் ரத்தோர் திறந்துவைத்தார்
இதனைத்தொடர்ந்து ஆவடி காவல் ஆணையர் அகத்தின் உள்ளடங்கிய அனைத்து காவல் நிலையங்களிலும் வரவேற்பு மேஜை திறந்து அங்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என உத்தரவிட்டார்.
இதன் அடிப்படையில் பொதுமக்களுக்கு அனைத்து காவல் நிலையங்களிலும் வரவேற்பு மேஜை அமர்த்தப்பட்டு அங்கு ஒரு பெண் காவலர் பணியில் அமர்த்தி புகார் அளிக்க அவர்களுக்கு பேனா பேப்பர் உள்ளிட்டவைகளை காவல்துறையினரே வழங்கி புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டார். இதனால் காவல் ஆணையர் சந்திப் ராய் ரத்தோர் அவர்களுக்கு பொதுமக்கள் மத்தில் நல்ல வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது..
No comments
Thank you for your comments