Breaking News

பள்ளிப்படிப்பை விருப்பமுடனும் ஆர்வமுடனும் கற்க வேண்டும்...

காஞ்சிபுரம் ஏனாத்தூர் உயர்நிலைப்பள்ளியில் அண்ணா உறுப்பு பொறியியல் கல்லூரி முதல்வர் கவிதா மாணவர்களிடையே பள்ளிப்படிப்பை விருப்பமுடனும் ஆர்வமுடனும் கற்க பல்வேறு ஆலோசனைகளையும் வழிகாட்டுதலையும் மாணவர்கள் மத்தியில் எடுத்துரைக்கும் வகையில் உரையாற்றினார். 



காஞ்சிபுரம் அண்ணா பொறியியல் கல்லூரி நாட்டு  நலப்பணித் திட்டம் மற்றும் இளைஞர் செஞ்சிலுவை சங்கம் சார்பில் ஏனாத்தூர் உயர்நிலைப்பள்ளியில் முகாம் அமைத்து பல்வேறு பணிகளை மேற்கொண்டு வரும் வேளையில் இன்று ஏனாத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள மாணவ மாணவிகளிடையே அண்ணா உறுப்பு கல்லூரி முதல்வர் கவிதா சிறப்புரையாற்றினார். 

இவற்றில் மாணவர்கள் பள்ளிப் படிப்பை விருப்பமுடனும் ஆர்வமுடன் நாம் பல்வேறு கனவுகளுடன் கல்வி கற்றால் தாங்கள் என்னவாக ஆக வேண்டும் என நினைத்து அயராது உழைத்தால் வெற்றி காண முடியும்  ஆசிரியர் பெருமக்கள் மாணவர்களுக்கு வழிகாட்டுதலாக எப்போதும் உடன் இருப்பார்கள் என கூறினார். இவற்றில் கனவு காணுங்கள் என பள்ளி மாணவர்களிடையே கூறிய முன்னாள் இந்திய குடியரசு தலைவர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களை நினைவுகூர்ந்து மாணவர் பருவத்தில் மேற்கொள்ளும் கல்வியானது கடைசி வரை உடன் இருக்கும் பணமோ பதவியோ நிலையானவை அல்ல என மாணவர் மத்தியில் பல்வேறு விளக்கங்களுடன் புரிதலை ஏற்படுத்தினார்.  

மாணவர்கள் தேர்வு நேரங்களில் தனக்கு தெரியாத ஒரு கேள்விக்கு பக்கத்தில் உள்ள ஒருவர் இடம் பார்த்து எழுதினால் அவற்றால் தெரிந்த 4 கேள்விகளுக்கான பதில் எழுதமுடியாமல் தோல்வியை தழுவ நேரிடும் எனவே தனக்குத் தெரிந்த கேள்விகளுக்கு மட்டும் பதில் அளித்து பின்பு தெரியாத கேள்விகளுக்கு மாணவர்களிடையே குரூப்பாக சந்தேகங்களையும் பதில்களையும் பரிமாறிக்கொண்டு அடுத்து வரும் தேர்வில் அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்க முடியும் இவற்றை பின்பற்றினால் எந்த தேர்வையும் வெற்றி பெறும் வாய்ப்பு கிட்டும் எனவும் தாங்கள் எழுதிய தேர்வுக்கு தாங்களாகவே மதிப்பெண் கணக்கிட்டு பார்த்தாள் நம்பிக்கை மேல் மேலும் உயரும் என தெரிவித்தார். 

இவற்றால் மாணவர்கள் உற்சாகம் அடைந்து முதல்வர் அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு துணிச்சலான பதிலளித்த மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் சால்வை அணிவித்து பெருமை சேர்த்தார். பிறகு அண்ணா உறுப்பு கல்லூரியில் பல்வேறு துறையை சார்ந்த தலைவர்கள் மாணவர்கள் மத்தியில் குட்டிக் கதைகளையும் மாணவிகள் பல்வேறு சூழ்நிலையில் கல்வியை பாதியில் விடுத்து குடும்ப சூழ்நிலை காரணமாக மேற்கல்வியை தொடர முடியாமல் இருப்பதை அரசாங்கம் பல்வேறு சலுகைகள் அளித்து இலவச கல்வியை மேற்படிப்பை உருவாகியுள்ளது. 

அவற்றை பெற்றோர்களிடம் கூறி பள்ளி படிப்பை முடித்து கல்லூரி படிப்பைத் தொடர பல்வேறு வழிமுறைகளை மாணவர்கள் மத்தியில் விளக்கினார்கள். இவற்றை மாணவர்கள் உற்சாகத்துடனும் பேராசிரியர்கள் கூறியதை கவனித்து பின்பற்றுவதாக தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில் அண்ணா உறுப்பு பொறியியல் கல்லூரி பல்வேறு துறை தலைவர் பேராசிரியர்கள் மதி, ஜம்ரூத், செல்வ புவனேஸ்வரி, ஹிர்தனா, தேவேந்திரன், ரவி மற்றும்  நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் விஜயகுமார், ஹரிஹரன், இளைஞர் செஞ்சிலுவை சங்கம் அலுவலர் சியாம் சங்கர், துணை அலுவலர்கள் ரேணுகாம்பாள், சரண்யா, ராம்குமார் ஆகியோர் மாணவர்களுடன் இணைந்து இப்பணியைச் செய்து வருகின்றனர்.

No comments

Thank you for your comments