Breaking News

அரசு நிலங்களில் ஆக்கிரமிப்பு கட்டடங்களை இடித்து அகற்றம்...

ஈரோடு:

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி  அறிவுறுத்தலுக்கிணங்க, ஈரோடு மாவட்டம் முழுவதும் அரசு நிலங்களில் நீண்டகாலமாக ஆக்கிரமிப்புகள் செய்து கட்டப்பட்டுள்ள கட்டடங்களை அகற்ற பல்வேறு துறை அலுவலர்களால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

அதன்படி, 23.03.2022 அன்று ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், பெருந்துறை கிராமம், ரீ.ச.எண்.866ல் 0.21.21 ஹெக்டேர் பரப்பு கொண்ட சாலை புறம்போக்கு நிலத்தில் 6 கான்கிரிட் வீடுகள் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டிருந்தது தெரியவந்தது. 

உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு கோட்ட பொறியாளர் (நெடுஞ்சாலைத்துறை) ராணி அவர்களின் தலைமையில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு வருவாய்த் துறையினர் நெடுஞ்சாலைத் துறையினர் மற்றும் காவல் துறையினர் உதவியோடு ஈரோடு ஜேசிபி இயந்திரங்கள்  மூலம்  அகற்றப்பட்டது. 

வெளியீடு : செய்திமக்கள் தொடர்பு அலுவலகம், ஈரோடு.




No comments

Thank you for your comments