உக்ரைன் தலைநகரை விட்டு இந்தியர்கள் உடனே வெளியேற இந்திய தூதரகம் அறிவுறுத்தல்
புதுடெல்லி:
உக்ரைனில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில் இந்தியர்களை உடனடியாக வெளியேறும்படி கீவ்வில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 6-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. குண்டுகளைப் பொழிந்தும், ஏவுகணைகளை வீசியும் அதிரடி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. ரஷ்ய ராணுவப் படைகள் தலைநகர் கீவ், கார்கீவ் போன்ற முக்கிய நகரங்களின் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில், உக்ரைன் தலைநகர் கீவில் வசிக்கும் இந்தியர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டும் என கீவ்-ல் உள்ள இந்திய தூததரகம் அறிவுறுத்தியுள்ளது.
மாணவர்கள் உள்பட அனைத்து இந்தியர்களும் கிடைக்கக்கூடிய ரயில்கள் அல்லது வேறு வழிகள் மூலமாக உடனடியாக வெளியேறவும் என தெரிவித்துள்ளது.
Advisory to Indians in Kyiv
— India in Ukraine (@IndiainUkraine) March 1, 2022
All Indian nationals including students are advised to leave Kyiv urgently today. Preferably by available trains or through any other means available.
No comments
Thank you for your comments