Breaking News

காஞ்சிபுரத்தில் பங்குனி உற்சவத்தையொட்டி 63 நாயன்மார்களுடன் வீதியுலா

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் பங்குனி உற்சவத்தையொட்டி ஏலவார்குழலி உடனுறை ஏகாம்பரநாதர் 63 நாயன்மார்களுடன் வீதியுலா நடைபெற்றது. வழிநெடுகிலும் ஆயிர கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற பஞ்சபூத ஸ்தலங்களில் நிலத்துக்கு உரிய தலமாக போற்றப்படும் ஏலவார்குழலி உடனுறை ஸ்ரீ ஏகாம்பரநாதர் திருக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாத உற்சவம் வெகு விமரிசையாக நடைபெறும்.

அந்த வகையில் இவ்வாண்டிற்கா உற்சவம் கடந்த 8-ஆம் தேதி அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது யூ உற்சவத்தின் 6ம் நாளான இன்று ஏலவார்குழலி உடனுறை ஸ்ரீ ஏகாம்பரநாதர்,அறுபத்தி மூன்று நாயன்மார்களுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று அதனைத் தொடர்ந்து வீதி உலாவானது ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்து நான்கு ராஜ வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

வெகுவிமர்சையாக ஆண்டு தோறும் நடைபெறும் இந்த உற்சவத்தையொட்டி இவ்வாண்டு உள்ளூர் மக்கள் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிநெடுகிலும் கூடி நின்று சாமி தரிசனம் செய்தனர்.

இவ்விழாவினையொட்டி பாதுகாப்பு பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.


மேலும் இந்த உற்சவத்தின் ஆறாம் நாளான இன்று இரவு வெள்ளி திருத்தேர் உற்சவம் அதனைத் தொடர்ந்து நாளை காலை இராத்தோற்ச்சமும் 18ஆம் தேதி அதிகாலை இவ்விழாவின் முக்கிய நிகழ்வான ஏலவார்குழலி சமேத ஏகாம்பரநாதர் பங்குனி திருக்கல்யாண வைபவமும் நடந்தேறி இரவு புண்ணியகோடி விமானத்தில் எழுந்தருளி 20-ஆம் தேதி தீர்த்தவாரி உற்சவத்துடன் இவ்விழாவானது நிறைவடைகிறது.



No comments

Thank you for your comments