Breaking News

வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு...

வேலூர்:

01.02.2022 அன்று  வேலூர்  மாவட்டம்  கீ.வ.குப்பம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சேத்துவண்டை கிராமத்தில்  வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.குமாரவேல் பாண்டியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வேலூர் மாவட்டம் கீ.வ.குப்பம் கீ.வ.குப்பம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சேத்துவண்டை கிராமத்தில்  மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ரூ.1.75 இலட்சம் மதிப்பீட்டில்  பண்ணை குட்டை அமைக்கும் பணிகள் நடைபெறுவதையும்,  பிரதம மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.1.70 இலட்சம் மதிப்பீட்டில் இரண்டு வீடுகள் கட்டுவதற்கு அடித்தள பணிகள் நடைபெறுவதையும், 15 வது நிதிக்குழு மானியம் 2020-2021 கீழ் ரூ.6.12 இலட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகள் நடைபெறுவதை ஆய்வு செய்து, சேத்துவண்டை கிராமத்தில் உள்ள நூலக கட்டிடத்தை ஆய்வு செய்து அவற்றை உடனடியாக சீர் செய்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.குமாரவேல் பாண்டியன்  உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின் போது குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர், செயற்பொறியாளர் ஊரக வளர்ச்சி துறை, குடியாத்தம் வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் கீ.வ.குப்பம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ஆகியோர் இருந்தனர். 



No comments

Thank you for your comments