Breaking News

விவசாயிகள் சாலை மறியலில்

சேலம்: 

சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த வெள்ளரி வெள்ளியில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்..

சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியில் காவிரி கரையோரப் பகுதிகளில் அதிக அளவிலான விவசாய மக்கள் விவசாயம் செய்து கொள்கின்றனர். 

அந்தப்பகுதியில் நீரைத் தேக்கி வைத்து அங்கு சுயமரியாதை அமைத்து விவசாயம் செய்து வருகின்றனர் என்ற நிலையில் சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த வெள்ளி வெள்ளி ஏரியின் தடுப்பு சுவரை சமூக விரோதிகள்  உடைத்ததால் ஊர் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

40 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய ஏரியை சமூக விரோதிகளால் உடைக்கப்பட்டு ஏரியில் உள்ள தண்ணீர் வீணாகி சாலையிலும் மற்றும் விவசாய நிலங்களில் செல்வதால் பயிர்கள் அழுகி பாழாகி விடுகிறது.

இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, விவசாயிகள் தங்களது விவசாய பயிர்களை இழந்து நிற்கின்றனர்.

இந்நிலையில், இந்த தடுப்பு சுவரை இடித்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்..

இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் எடப்பாடி காவல் ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் நேரில் வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.  பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட பிறகு தடுப்பு சுவரை உடனே அடைக்கப்படும் என்று உறுதி அளித்தனர். அதன் பிறகு அங்குள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

செய்தியாளர் : எஸ் எம்  பாண்டியன்

No comments

Thank you for your comments