மாதிரி வாக்குச்சாவடியை திறந்து வைத்தார் ஆட்சியர் ஆர்த்தி
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாநகராட்சி பேருந்து நிலையத்தில் 2022 ஆம் ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலுக்கான மாதிரி வாக்குச்சாவடியை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி இ.ஆ.ப., அவர்கள் இன்று (07.02.2022) திறந்து வைத்து பார்வையிட்டார்.
உடன் மாவட்ட தேர்தல் பார்வையாளர் திருமதி.கே.கற்பகம் இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.ம.சுதாகர், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) திரு.ஸ்ரீனிவாசராவ், காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையர் திரு.நாராயணன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளனர்.
No comments
Thank you for your comments