மாணவ-மாணவியர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம்...
காஞ்சிபுரம் :
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று முதல் 15 வயது முதல் 18 வயது வரை உள்ள பள்ளி மாணவர்கள் தடுப்பூசி செலுத்திகொள்ள பள்ளியில் தடுப்பூசி முகாம் துவக்கம்.
149 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இன்று 42,000 பள்ளி மாணவ மாணவியர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம்...
தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலை தொடங்கியதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தெரிவித்தார். தமிழகத்தில் மெல்ல மெல்ல நோய் தொற்றால் பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பள்ளிகளில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் நடைபெறாது என அறிவிப்பைத் தொடர்ந்து 9ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.
அனைத்து பள்ளிகளிலும் 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட பயிலும் அனைத்து மாணவ மாணவிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் காஞ்சிபுரம் அடுத்த தாமல் அரசு மேல்நிலைப்பள்ளியில் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி எழிலரசன் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை துவக்கி வைத்தார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 149 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இன்று தடுப்பூசி செலுத்தும்போது முகாம் அமைக்கப்பட்டு பள்ளி வகுப்பறையில் சென்று சுகாதாரத்துறையினர் மாணவ மாணவிகளுக்கு தடுப்பு ஊசி செலுத்தி வருகின்றனர்.
இன்று ஒரே நாளில் காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் 42,000 பள்ளி மாணவ மாணவிகளுக்கு செலுத்த திட்டமிட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments
Thank you for your comments