அரசின் விதிமுறைகளை மீறிய உணவகத்திற்கு அபராதம்
காஞ்சிபுரம்:
கொரோனா தொற்றை கட்டுபடுத்த இன்று தமிழக அரசு முழு ஊரடங்கை அறிவித்துள்ளது. இந்த நிலையில் காஞ்சிபுரம் காந்திசாலையில் உள்ள உணவகத்தில் அமர்ந்து உணவு அருந்தியதால் அரசின் விதிமுறைகளை மீறி உணவகம் செயல்பட்டதால் 500 ரூபாய் அபராதம் விதித்து காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
தமிழக அரசின் உத்தரவின் படி முழு ஊரடக்கின் போது அனைத்து உணவகங்களில் பார்சல் மட்டுமே வழங்க வேண்டும் விதிமுறைகளை மீறி தொடர்ந்து உணவகம் இது போன்று செயல்பட்டால் சீல் வைக்கப்படும் என எச்சரிக்கை.
No comments
Thank you for your comments