ஃபாக்ஸ்கான் தொழிற்சாலை ஊழியர்களுக்கு நடந்த கொரோனா பரிசோதனை.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் சுங்குவார்சத்திரம் பகுதியில் அமைந்துள்ள செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையான ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள்கான தங்கும் விடுதிகள், திருவள்ளூர் மாவட்டத்தில் ஒன்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இரண்டும் உள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் இயங்கி வந்த விடுதியில் சமைக்கப்பட்ட உணவு காரணமாக பலர் மயக்கமடைந்து தனியார் மருத்துவமனை அரசு மருத்துமனை அனுமதிக்கப்பட்டனர். அவர்களில், எட்டு பேர் மிகவும் உடல்நலம் குன்றி காணப்பட்டனர். உடல்நிலை குறித்து தொழிலாளர்களுக்கு தெரிவிக்காததால், மாபெரும் சாலை மறியல் போராட்டம், 18 மணி நேரம் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்றது.
அதன்பின் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் முதல் கட்ட பேச்சுவார்த்தைக்கு பின், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சிறு குறு நடுத்தர தொழில் துறை அமைச்சர் ஆகியோர் பேச்சு நடத்தி சாலை மறியல் வாபஸ் பெற்றனர்.
அதன்பின் அமைச்சர்கள் இருவரும் தங்கும் விடுதிகளில் ஆய்வு மேற்கொண்டு அடிப்படை வசதிகளை மேற்கொள்ள உத்தரவிட்டனர். மேலும் 10 நாட்கள் தொழிற்சாலைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு தொழிலாளர்கள் வீடு திரும்பினர்.
மீண்டும் தொழிற்சாலை, நாளை திறக்கப்பட உள்ளது. இந்நிலையில் தொழிலாளர்கள் தற்போது தங்கும் விடுதிக்கு திரும்பி உள்ளனர்.
இவர்களுக்கு தமிழக அரசின் வழிகாட்டுதல் படி பரிசோதனை மேற்கொள்ள திட்டமிடப்பட்டு தங்கும் விடுதியில் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. 65க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு இதுவரை பரிசோதனை மாதிரிகள் எடுக்கப்பட்டு உள்ளது.
No comments
Thank you for your comments