வேலூர் மாநகராட்சியில் 6 இடங்களில் வேட்புமனு தாக்கல் செய்ய ஏற்பாடு
வேலூர், ஜன.28-
வேலூர் மாநகராட்சியில் ஆணையர் தலைமையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. வேலூர் மாநகராட்சியில் 6 இடங்களில் வேட்புமனு தாக்கல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் வேலூர் மாநகராட்சி குடியாத்தம், பேரணாம்பட்டு நகராட்சிகள் மற்றும் ஒடுகத்தூர், பள்ளிகொண்டா, திருவலம், பென்னாத்தூர் ஆகிய பேரூராட்சிகளுக்கு வருகிற 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
இந்தப் பகுதிகளில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. இன்று வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. வேலூர் மாநகராட்சியில் 6 இடங்களில் வேட்புமனு தாக்கல் செய்ய ஏற்பாடு செய்து வருகின்றனர்.
காட்பாடி 1-வது மண்டல அலுவலகம், புதிய பஸ் நிலையம் அருகே புதிதாக கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி கார் நிறுத்தும் வளாகம், சத்துவாச்சாரி 2-வது மண்டல அலுவலகம், வேலூர் பழைய மாநகராட்சியில் இயங்கிவரும் 3-வது மண்டல அலுவலகம், வேலூர் மாநகராட்சி அலுவலகம் தொரப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளி என மொத்தம் 6 இடங்களில் வேட்புமனுத் பெற ஏற்பாடு செய்தள்ளனர். இதற்காக 6 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வேலூர் மாநகராட்சியில் மொத்தம் 60 வார்டுகள் உள்ள. நிர்வாக வசதிக்காகவும் கூட்டம் அதிக அளவில் வருவதை தடுக்கவும் 10 வார்டுக்கு ஒரு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளனர்.அவர்களிடம் அந்தந்த பகுதி வார்டுகளில் போட்டியிடுபவர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம் என தெரிவித்துள்ளனர்.
மனு தாக்கல் செய்ய வருகிற 4ம் தேதி கடைசி நாள். 5ம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெறுகிறது. 7ம் தேதி போட்டியிட விரும்பாதவர்கள் வேட்புமனுக்களை திரும்பப் பெறலாம்.22ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.மார்ச் மாதம் 2ம் தேதி வார்டு கவுன்சிலர்கள் பதவி ஏற்பு விழா நடைபெறும்.
அதற்கு பிறகு மார்ச் 4ம் தேதி மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயர் நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர் ஆகியோரை தேர்ந்தெடுக்க மறைமுகத் தேர்தல்கள் நடைபெற உள்ளது.
No comments
Thank you for your comments