வேலூர் மாநகராட்சி 2வது மண்டல சுகாதார அலுவலர் பணியை பாராட்டி சான்றிதழ்
வேலூர்:
இன்று 73 வது குடியரசு தின விழா முன்னிட்டு நேதாஜி விளையாட்டு அரங்கத்தில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்து பல துறைகளில் சிறந்த பணி செய்தவர்களுக்கு சான்று வழங்கப்பட்டது.
வேலூர் மாநகராட்சி சுகாதாரத் துறையில் கொராணா காலகட்டத்தில் சிறப்பான முறையில் பணியை செவ்வனே செய்து பணியாற்றியமைக்கு வேலூர் மாநகராட்சி இரண்டாவது மண்டல சுகாதார அலுவலர் K. சிவக்குமார் அவர்கள் பணியை பாராட்டி மாவட்ட ஆட்சியர் குமராவேல் பாண்டியன் அவர்கள் சான்று வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா, மற்றும் வேலூர் மாநகராட்சி ஆணையாளர் அசோக்குமார், மாநகர நல அலுவலர் டாக்டர் மணிவண்ணன் உடனிருந்தனர்.
No comments
Thank you for your comments