Breaking News

பொங்கல் பரிசாக 21 மளிகை பொருள் தொகுப்பை வழங்கினார் எம்.எல்.ஏ., எழிலரசன்

காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில்  பொங்கல் பரிசாக 21 மளிகை பொருள் அடங்கிய தொகுப்பை குடும்ப அட்டைதாரர்களுக்கு எழிலரசன் எம்.எல்.ஏ வழங்கினார்.

காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோயில் சன்னதி தெருவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசாக 21 வகை மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பை  வழங்கும்  திட்டத்தை தொடர்ந்து இன்று காஞ்சிபுரத்தில் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கினார்.

இந்நிகழ்வில் நகர செயலாளர் சன்பிராண்ட் ஆறுமுகம்,நகர அவைத்தலைவர் எஸ்.சந்துரு, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் எல்.அபுசாலி,மாவட்ட பிரதிநிதி குமரேசன், ராம்பிசாத் உள்ளிட்ட திமுகவினரும் வட்டாட்சியர் கலந்துகொண்டனர்.




No comments

Thank you for your comments