11 கொலைகள் உட்பட 63 வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ள கொடுங்குற்றவாளி கைது
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 11 கொலைகள், 15 கொலை முயற்சிகள் உட்பட மொத்தம் 63 வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ள 33 வயதுள்ள கொடுங்குற்றவாளி தியாகு (எ) பொய்யா குளம் தியாகு (எ) தியாகராஜன் என்பவரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.எம்.சுதாகர் அவர்களது தனிப்படையினர் டெல்லிக்கு அருகே ஹரியானா மாநிலத்தில் தப்பிச்செல்ல முயற்சித்த போது விரட்டிப்பிடித்து கைது செய்து உள்ளதாகவும், இன்றைக்கு சென்னைக்கு அழைத்து வரவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
🔥 Also Read வேலூர் வட்டார போக்குவரத்து துறையில் விலைபோகும் அதிகாரிகள்!
No comments
Thank you for your comments