பையா கவுண்டர் தலைமையில் மாற்றுக்கட்சியினர் 100க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைவு...
கோவை:
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்று, கோவை மாநகர் மேற்கு மாவட்டம், கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, இடிகரை பேரூராட்சி அ.தி.மு.க இடிகரை பேரூராட்சி எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் கணேஷ் தலைமையில், அ.தி.மு.க - அ.ம.மு.க - பா.ம.க உள்ளிட்ட மாற்றுக்கட்சிகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் அக்கட்சிகளில் இருந்து விலகி, கோவை மாநகர் மேற்கு மாவட்ட கழகப் பொறுப்பாளர் பையாக்கவுண்டர் (எ) ஆர்.கிருஷ்ணன் தலைமையில், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி அவர்களின் முன்னிலையில் தங்களை தி.மு.கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கழகச் செயலாளர் எஸ்.பி.சுரேஷ்குமார், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.பி.நாகராஜன், இடிகரை பேரூர் கழகச் செயலாளர் ஜனார்த்தனன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments