Breaking News

TNPSC போட்டித் தேர்வுகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு... பிப்ரவரியில் குரூப் 2, மார்ச்சில் குரூப்-4 தேர்வு அறிவிப்பு

சென்னை:

2022-ம் ஆண்டிற்கான பணி நியமனங்கள், போட்டித் தேர்வுகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த திட்ட அறிக்கையை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.

தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவைப்படும் ஊழியர்கள், அலுவலர்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர்.  இதற்கான போட்டித் தேர்வுகள், நேர்காணல் தேர்வுகளை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் ( TNPSC) நடத்தி வருகிறது.

இந்நிலையில் சென்னை பிராட்வேயில் உள்ள தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணயத்தில் (TNPSC ) 2021-22 ஆண்டுக்கான காலியாக உள்ள இடங்கள் மற்றும் தேர்வு நடைபெறும் தேதிகள் தொடர்பாக, அதன் தலைவர் பாலச்சந்திரன், செயலாளர் உமா மகேஸ்வரி, தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரி கிரண் குராலா ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

இந்த சந்திப்பின் போது 2022-ம் ஆண்டிற்கான பணி நியமனங்கள், போட்டித் தேர்வுகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த திட்ட அறிக்கை இன்று வெளியிட்டனர்.  இதன்படி குரூப் 2, குரூப் 2a தேர்வுக்கான அறிப்பாணை பிப்ரவரி மாதம் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பாணை மார்ச் மாதத்தில் வெளியாகும். அட்டவணை வெளியிடப்பட்ட 75 நாள்களுக்கு பிறகு தேர்வுகள் நடைபெறும். விடைத்தாள் ஏற்றக்கூடிய லாரிகளை GPS முறையில் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கூறினர்.

குரூப் 2 -ஏ மொத்தம் 5,831 காலிப்பணியிடங்கள் உள்ளது. குரூப்-4 5,244 காலிப்பணியங்கள் உள்ளது. இது இன்றைய தேதிக்குட்பட்ட காலிப்பணியிடங்கள். 

அறிவிப்பாணை வெளியான பிறகும் கூட காலிப்பணியிடங்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. குரூப்-4 தேர்வில் தமிழ்தாளில் 40 மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே தேர்ச்சி. குறைந்தபட்சம் 40 மதிப்பெண்கள் கட்டாயம்.

கூடுதல் மதிப்பெண் பெற்றால் அதுவும் கணக்கிடப்படும். தமிழ் தாளுக்கான பாடத்திட்டம், வினாத்தாள் வடிவமைப்பு விரைவில் வெளியிடப்படும். 32க்கும் அதிகமான தேர்வுகள் இந்தாண்டு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளனர்.

No comments

Thank you for your comments