Breaking News

பழைய கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் தலைமை காவலர் உயிரிழப்பு - முதலமைச்சர் இரங்கல், நிவராணம் அறிவிப்பு

மதுரை

மதுரை கீழவெளி வீதியில் உள்ள பழமையான கட்டடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்த விளக்குத் தூண் காவல் நிலைய தலைமைக் காவலர்  சரவணன் குடும்பத்தினருக்கும், காயமுற்ற மற்றொரு தலைமைக் காவலர் கண்ணன் குடும்பத்திற்கும் ஆறுதல் கூறிய முதலமைச்சர் ஸ்டாலின், கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் சிக்கியவர்களுக்கு நிவாரணம் வழங்கிடவும் ஆணையிட்டுள்ளார்.

இன்று (22-12-2021) அதிகாலை, மதுரை மாநகர் விளக்குத் தூண் காவல் நிலையத் தலைமைக் காவலர்கள் சரவணன் மற்றும் கண்ணன் ஆகிய இருவரும் இரவு பாதுகாப்புப் பணிக்குச் சென்றபோது, கீழவெளி வீதியில் உள்ள கணபதி ஸ்டோர் என்ற பூச்சி மருந்து கடையின் முன்பு நின்று கொண்டிருந்தபோது, பாழடைந்த நிலையில் இருந்த கட்டடம் திடீரென இடிந்து விழுந்ததில் தலைமைக் காவலர்  சரவணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மற்றொரு தலைமைக் காவலர் கண்ணன் என்பவருக்கு தலையில் பலத்த காயமும், கையில் எலும்பு முறிவும் ஏற்பட்ட நிலையில், மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வருகிறார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

இந்தத் துயர சம்பவத்தை அறிந்த முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் , மிகவும் வேதனையுற்று தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டதோடு, இச்சம்பவத்தில் உயிரிழந்த தலைமைக் காவலர் சரவணன் குடும்பத்திற்கு 25 இலட்சம் ரூபாய் நிவாரணமும், அவரது மனைவிக்கு அரசுப் பணியும், 

அதோடு மட்டுமல்லாமல் பலத்த காயமும், கையில் எலும்பு முறிவும் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மற்றொரு தலைமைக் காவலரான கண்ணன் அவர்களுக்கு 5 இலட்சம் ரூபாய் நிவாரணமும் வழங்கிட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.

No comments

Thank you for your comments