கொரோனா தொற்று நீங்க வேண்டி முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சபரிமலைக்கு நடைபயணம்
காஞ்சிபுரம்:
கொரோனா பயம் நீங்க வேண்டியும் உலகம் மக்கள் நன்மை பெற வேண்டியும் சமூக ஆர்வலரும் முன்னாள் ஒன்றிய கவுன்சிலருமான முத்தியால்பேட்டை ஆர்வி ரஞ்சித் குமார் சபரிமலைக்கு நடைபயணம்.கிராம மக்கள் அனைவரும் ஒன்று கூடி வந்து வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஆர்.வி ரஞ்சித் குமார் சமூக ஆர்வலராகவும் முன்னாள் ஒன்றிய கவுன்சிலராகவும் இருந்து வருகிறார்.
இந்நிலையில் உலக மக்கள் நலம் பெறவும், நோய்நொடியின்றி வாழவும், கொரோனா பயம் நீங்க வேண்டியும் முத்தியால்பேட்டை கிராமத்தில் இருந்து புறப்பட்டு நடை பயணமாகவே கேரளா மாநிலம் சபரிமலையில் உள்ள ஐயப்பனை தரிசிக்க இன்று முத்தியால்பேட்டையில் உள்ள முலஸ்தம்மன் கோவிலில் இருமுடி கட்டிக்கொண்டு நடை பயண யாத்திரையை தொடங்கினார்.
உலக நன்மை வேண்டி தொடர்ந்து நான்காவது ஆண்டாக நடைபயணம் மேற்கொண்ட ரஞ்சித்குமாருக்கு கிராம மக்கள் அனைவரும் ஒன்று கூடி வந்து வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.
No comments
Thank you for your comments