கூட்டுறவு சங்க தலைவராக ஏ.எஸ். முத்து செல்வம் பதவி ஏற்பு..
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் முருகன் பட்டு கூட்டுறவு சங்க தலைவராக ஏ.எஸ். முத்து செல்வம் பதவி ஏற்றுக்கொண்டார்.
காஞ்சிபுரம் முருகன் பட்டு கூட்டுறவு சங்கத்திற்கு தேர்தல் விருப்பமான கடந்த 10ஆம் தேதி வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து 17ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது.
நடந்து முடிந்த தேர்தலில் 19 ஆம் தேதி ஏ.எஸ்.முத்துச்செல்வம் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனை தொடர்ந்து 22ம் தேதி மாவட்ட கழக செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான கா.சுந்தர் முன்னிலையில் ஏ.எஸ்.முத்துசெல்வம் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி. எழிலரசன், மாவட்ட அவைத்தலைவர் சி.வி.எம்.ஏ. சேகரன், நகர செயலாளர் சன் பிரான்டு ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினர் எஸ்.கே.பி. சீனிவாசன், மாநில வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் ராம கிருஷ்ணன், ஒன்றிய செயலாளர்கள் பி எம் குமார், ஞானசேகர், பூபாலன், சேகர், செல்வகுமார், குமணன், மாவட்ட பிரதிநிதிகள் எம் எஸ்.சுகுமார், சிகாமணி,நகர அவைத்தலைவர் சந்துரு, ஜெகநாதன், பொருளாளர் வெங்கடேசன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் யுவராஜ்,துணைத் தலைவர் இளங்கோவன் இயக்குனர்கள் ரமேஷ், அசோக்குமார், பிரசாத் ,விஜயா ராமலிங்கம் கனகவல்லி சுதர்சனம் உள்ளிட்ட நெசவாளர்கள் வியாபாரிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments