Breaking News

தடுப்பூசி போடாதவர்கள் தடுப்பூசி போட்டதாக செல்போனுக்கு தகவல் வந்தால் புகார் தெரிவிக்கலாம்... மாவட்ட வாரியாக புகார் எண்...

சென்னை:

தடுப்பூசி செலுத்தக் கூடியவர்களின் செல்போன் எண் சான்றிதழ் வழங்குவ தற்காகவும், எந்த தேதியில் முதல் தவணை, 2-ம் தவணை செலுத்தப்பட்டது போன்ற விவரங்கள் சுகாதாரத்துறைக்கு தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், தடுப்பூசி போடாதவர்களுக்கு தடுப்பூசி போட்டதாக செல்போனுக்கு தகவல் வருகிறது ... அவ்வாறு  வந்தால் புகார் தெரிவிக்கலாம் என்று புகார் எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தி வருகிறது. இதுவரையில் 7 கோடியே 17 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இன்னும் 1.5 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும்.

தடுப்பூசி இதுவரையில் போட்டுக் கொள்ளாதவர்கள் விரைவாக செலுத்திக் கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.

இந்தநிலையில் ஒரு சிலருக்கு தடுப்பூசி போடாமலேயே போட்டதாக செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், சுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

இதை தொடர்ந்து இதுபோன்ற தவறு எப்படி நடக்கிறது என்பதை சுகாதாரத்துறை ஆய்வு செய்து அதற்கான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

அந்த அடிப்படையில் தமிழகம் முழுவதும் உள்ள 46 சுகாதார மாவட்டங்களில் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இது போன்ற தவறுகள் நடைபெறாமல் தடுப்பதற்காக தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர்.செல்வ விநாயகம் கூறியதாவது:-

தடுப்பூசி போடதாவர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டதாக ஒரு சிலருக்கு தகவல் வந்ததாக சுகாதாரத் துறையின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. இந்த தவறு எப்படி நடந்தது என்று ஆய்வு செய்யப்பட்டது.

செல்போன் நம்பரை பதிவு செய்யும் போது தவறுதலாக ஒரு எண்ணை மாற்றி பதிவு செய்ததால் இதுபோன்ற தவறுகள் ஏற்பட்டதாக தெரிகிறது.

தடுப்பூசி செலுத்தக் கூடியவர்களின் செல்போன் எண் சான்றிதழ் வழங்குவ தற்காகவும், எந்த தேதியில் முதல் தவணை, 2-ம் தவணை செலுத்தப்பட்டது போன்ற விவரங்கள் சுகாதாரத்துறைக்கு தெரிவிக்கப்படுகிறது. அதே போல தடுப்பூசி செலுத்திக் கொண்ட வர்களுக்கும் இந்த செல்போன் வழியாக குறுஞ் செய்தியாக அனுப்பப்படுகிறது.

ஒரு குடும்பத்தில் 5 பேர் இருந்தால், 5 பேரும் ஒரே எண்ணை கொடுக்கலாம். 4 பேர் தடுப்பூசி செலுத்தி இருக்கலாம். ஒருவர் போடாத நிலையில் அவருக்கும் தவறான பதிவால் தடுப்பூசி போட்டதாக தகவல் சென்று விடுகிறது.

இது முகாம்களில் தற்காலிக ஊழியர்கள் பதிவு செய்யும் போது கவனக் குறைவால் ஏற்படுகிறது. 7 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தியதில் 4 அல்லது 5 பேருக்கு இதுபோன்ற தவறான தகவல் சென்றுள்ளது.

இதுபோன்ற தவறுகள் நடக்காமல் இருப்பதற்காக கண்காணிக்க சிறப்பு அதிகாரிகள் 46 சுகாதார மாவட்டங்களில் நியமிக்கப்பட்டு அவர்களின் செல்போன் எண்கள் பொது மக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல், செலுத்திக் கொண்டதாக யாருக்கேனும் தகவல் வந்தால் அவர்கள் உடனடியாக கீழ்கண்ட எண் களுக்கு புகார் தெரிவிக்கலாம். சில களப்பணியாளர்கள் செய்கின்ற தவறுகள் இனி நடைபெறாமல் தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மாவட்டம் வாரியாக புகார் தெரிவிக்க வேண்டிய எண்கள் விவரம்:-

அறந்தாங்கி- 9442962738

அரியலூர்- 9865177416

ஆத்தூர்- 9787117030

சென்னை- 9941491164

செய்யாறு- 9500659593

கோயம்புத்தூர்- 9894338846

செங்கல்பட்டு- 9751487318

கடலூர்- 9443737905

தர்மபுரி- 9790284264

திண்டுக்கல்- 8754541244

ஈரோடு- 9894338846

கள்ளக்குறிச்சி- 9443737905

காஞ்சிபுரம்- 9751487318

கரூர்- 8012015540

கோவில்பட்டி- 9092280164

கிருஷ்ணகிரி- 9488091641

மதுரை-9244861327

மயிலாடுதுறை- 7904821308

நாகப்பட்டினம்- 7904821308

நாகர்கோவில்- 9791582914

நாமக்கல்- 9994724455

பழனி- 9843557724

பரமக்குடி- 9994051625

பெரம்பலூர்- 9443835677

பூந்தமல்லி- 7708991059

புதுக்கோட்டை- 9443046324

ராமநாதபுரம்- 9994051625

ராணிப்பேட்டை- 8754224556

சேலம்- 9842946703

தென்காசி- 8248722957

சிவகங்கை- 9442106748

சிவகாசி- 9500925440

தஞ்சாவூர்- 9865177416

தேனி- 9894887136

திருவள்ளூர்- 7708991059

திருவாரூர்- 9442456080

திருச்சி- 9944842742

திருநெல்வேலி- 9442126179

திருப்பத்தூர்- 9842433364

திருப்பூர்- 9677447084

திருவண்ணாமலை- 7299384974

தூத்துக்குடி- 9092280164

ஊட்டி- 9585018777

வேலூர்- 9952827303

விழுப்புரம்- 9865552258

விருதுநகர்- 9500925440

No comments

Thank you for your comments