Breaking News

சட்ட மேதை அம்பேத்கரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை...

காஞ்சிபுரம்:

இன்று, சட்ட மேதை அம்பேத்கரின் 65வது நினைவு தினத்தையொட்டி காஞ்சிபுரம் செவிலிமேடு பகுதியில் உள்ள அம்பேத்கரின் திரு உருவ சிலைக்கு மாவட்ட ஆதிதிராவிட நலக்குழு தலைவர் மோகன் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று அம்பேத்கரின் நினைவு தினத்தை வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் இன்று செவிலிமேடு பகுதியில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு மோகன் அவர்கள் தலைமையில் 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒன்று கூடி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்பு வழக்கறிஞர் மதியழகன் அம்பேத்கரின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்தார். அங்கு இருந்த விளையாட்டு இவர்களுக்கு கிரிக்கெட் மட்டை பால் வாலிபால் நெட் வலைகள் போன்றவைகளை வழங்கினார் பின்பு அங்கு இருந்த ஏழை எளிய மக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் சுமன் ஜான்சன் உமேஷ் கபாலி சக்திவேல் ஏழுமலை ஸ்ரீபன் சேட்டு ரிஷப் குப்புசாமி மாரிமுத்து முரளி முருகேசன் போன்றோர் கலந்து கொண்டனர்.









No comments

Thank you for your comments