தந்தை அடித்து கொலை செய்த மகன் கைது
அரூர்:
அரூர் அருகே சொத்து தகராறு காரணமாக தந்தையை அடித்துக் கொலை செய்ததாக அவரது மகனை போலீஸôர் வியாழக்கிழமை கைது செய்தனர்.
தருமபுரி மாவட்டம், அரூரை அடுத்த மாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பெருமாள் மகன் கோபால் (70). இவருக்கு மகன், 3 மகள்கள் உள்ளனர். விவசாயி கோபாலுக்கு சொந்தமாக சுமார் 10 ஏக்கர் விவசாய நிலம் உள்ளதாம்.
இந்த நிலத்தினை தமது மகள்கள், மகனுக்கு சமமாக பிரித்து தர வேண்டும் என விவசாயி கோபால் தமது குடும்பத்தினரிடம் தெரிவித்திருந்தாராம்.
இந்த நிலத்தினை பிரிப்பது தொடர்பாக தந்தை, மகன் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம். இது குறித்து விவசாயி கோபால், தமது மகன் முருகேசன் (45) மீது, அரூர் காவல் நிலையத்தில் அண்மையில் புகார் செய்துள்ளார்.
இந்த நிலையில், சொத்து தொடர்பாக தந்தை, மகன் இடையே வியாழக்கிழமை விடியற்காலை திடீரென தகராறு ஏற்பட்டதாம். அப்போது, ஆத்திரமடைந்த முருகேசன், தமது தந்தையை இரும்பு கம்பியால் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில், தலைப்பகுதியில் பலத்த காயமடைந்த விவசாயி கோபால் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். இது குறித்து அரூர் போலீஸôர் வழக்குப் பதிந்து, இதில் தொடர்புடைய முருகேசனை கைது செய்தனர்.
No comments
Thank you for your comments