சிஎஸ்ஐ கிறிஸ்து நாதர் ஆலயத்தில் ஏழைகளுக்கு கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு விழா கொண்டாட்டம்...
காஞ்சிபுரம்:
தென்னிந்திய திருச்சபையின் சென்னைப்பேராயம் காஞ்சிபுரம் குரு சேகரம் சிஎஸ்ஐ கிறிஸ்து நாதர் ஆலயத்தில் ஏழைகளுக்கு கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு விழா கொண்டாடப்பட்டது
காஞ்சிபுரம் ரயில்வே ரேட்டில் அமைந்துள்ள சி.எஸ்.ஐ .கிறிஸ்து நாதர் ஆலயத்தின் சார்பாக குரு சேகர் தலைவர் அருட்பணி தேவஇரக்கம் தலைமையில் ஏழைகளுக்கு கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு விழா கொண்டாடப்பட்டது.
கிறிஸ்துமஸ் விழாவில் மிகவும் நலிந்தோர் ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
கல்வாரிமேடு, பெதஸ்தா குளம், காமாட்சி நகர், உஒழையூர் ஆகிய பகுதிகளில் வாழ்ந்த மக்களுக்கு பங்குத் தந்தையின் சார்பில் காஞ்சிபுரம் குருசேகர திருச்சபைகளின் ஏழை எளிய மக்களுக்கும் காஞ்சிபுரம் திருச்சபையின் பங்கு சார்பாகவும் விழா நடைபெற்றது.
இவ்விழாவில் குருசேர தலைவர் அருட்பணி தேவ இரக்கம் பெண்கள் ஐக்கிய சங்க பொறுப்பாளர்கள் சிறுவர்ஐக்கிய சங்க பொறுப்பாளர்கள் கிளை திருச்சபை ஊழியர்கள் கௌரவ ஆயர்கள் குழு செயலாளர்கள் பொருளாளர் கிறிஸ்மஸ் விழா குழுவினர் மற்றும் சமுகஆர்வலர்கள் பங்கு கொண்டு சிறப்பித்தனர்.
No comments
Thank you for your comments